Tuesday, September 27, 2011

2030 ல் தமிழகம் ஒரு சின்ன கற்பனை

1. காவிரியில் தண்ணீர் தராததால் தஞ்சையில் மிகப்பெரிய பஞ்சம்அதன் காரணமாகவளர்ந்து வரும் த்மிழ் தீவிரவாத இயக்கமான தமிழோயிஸ்டுகள் கர்நாடகாவில் புகுந்துவன்முறை வெறியாட்டம்தற்க்கொலைப் படைத்தாக்குதல்.
2. தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டும் - பாரத பிரதமர் திரு.ராகுல் காந்தி கருத்துநாட்டுக்கும்நாட்டு மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டியவர்கள்,அவர்களை அழிக்க ராணுவ தாக்குதல் விரைவில் தமிழகத்தில் தொடங்கும் என தெரிவித்தார்இதையடுத்துதமிழக எல்லையோரங்களில் தயார் நிலையில் இந்திய ராணுவம். தன் தந்தையைக் கொன்ற தமிழர்களை முற்றிலும் அழிக்கும் உள்நோக்கத்துடனே ராகுல் தமிழர்களின் மீதுதாக்குதலை ஆரம்பித்திருக்கிறார் என்று தமிழ் இன உணவாளர்கள் (No spelling mistake) கருத்துதெரிவித்துள்ளனர்.
3. தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் எனக்கோரி வடக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் சென்னையிலும்தெற்கு தமிழக முதல்வர் அழகிரி மதுரையிலும் உண்ணாவிரதம். உண்ணாவிரதத்தை கைவிடா விட்டால் அவர்கள் கட்சி மத்திய மந்திரிகள் பதிவி பறிக்கப்படும் என ராகுல்காந்தி மிரட்டியதால்உண்ணாவிரதம் வாபஸ்மேலும் ராகுலின் மகன் திருமணத்துக்கு எல்லா ராணுவமும் சென்று விட்டதால்தமிழகத்தில் இரண்டு நாள்போர் நிறுத்தம்இதை மறைத்துஎன்னுடைய உண்ணாவிரத்த்தின் பயனாலே மத்திய அரசு போர் நிறுத்தம்அறிவித்தது என்று முரசொலியில் ஸ்டாலின்அழகிரி தனித்தனி அறிக்கை.
4. தி.மு. வில் உச்சகட்ட பனிப்போர்வடக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கும்தெற்கு தமிழக துணைமுதல்வர் துரை தயாநிதிக்கும் நடுவே விரிசல்ஒட்டுமொத்த தி.மு. வின் தலைவராக அடுத்து தானே ஆகவேண்டும் என இருவரும் தத்தம் தந்தைகளிடம் சண்டையிட்டு வருகின்றனர்எனவே இரண்டு தமிழகமுதல்வர்களுமே கவலையில் ஆழ்ந்துள்ளனர்தம் தந்தை ராஜ தந்திரமாக தமிழகத்தை இரண்டாக பிரித்தது போல கட்சியை இரண்டாக பிரிக்க முடியாமல்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என பேட்டி.
5. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்எந்திரன் பார்ட் 4 ல் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிக்குஜோடியாக நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா மறுப்புமணிரத்தினத்தின் ஐம்பதாவது படத்தில் நடிக்க கால்ஷீட்குடுத்துள்ளதால் ரஜினியுடன் இந்தப்படத்தில் நடிக்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தார்இந்தப் படத்தில் ரஜினியின் பாட்டியாக முன்னாள் கவர்ச்சிக்கன்னி ஸ்ரேயா நடிக்கிறார்.
6. அஜீத் இனி எனக்கு தேவையில்லைகௌதம் கடுப்பு பேட்டிஅஜித்தை வைத்து படம் இயக்க முடிவு செய்தஅவரது நிறைவேறா ஆசையில்தொடர்ந்து இருபதாவது முறையாக மண்ணள்ளிப்போட்டனர்இதற்க்குபதில் அளித்த அஜித்அவர் இல்லாமல் நான் நூறு படம் பண்ணிட்டேன்நான் இல்லாமல் அவர் இருபது படம்பண்ணிட்டார்யாருக்கும் யாரும் தேவையில்லை என்று வழக்கம் போல கூறியுள்ளார். 
7. தொடர்ந்து பத்து படம் தோல்வி அடைந்ததால் ஐம்பது கோடி வரை நஷ்டம்தியேட்டர் அதிபர்கள் இளைய(2030-ல் கூடதள்பதி விஜயின் வீட்டு முன் போராட்டம். (இன்னுமாடா இவர நம்புறீங்க!!) நஷ்டத்தை திருப்பிதராவிட்டால் மகேஷ் பாபுவிடம் சொல்லி அவர் பட ரீமேக் உரிமையை இனி ஜெராக்ஸ் ரவிக்கு மட்டுமே தரசட்ட திருத்தம் செய்வோம் என மிரட்டியதால் விஜய் கலக்கம்இந்நிலையில் விஜயின் மகன் நடிக்கும் சூலாயுதம் படத்தில் அவருக்கு சூர்யா-ஜோதிகா மகள் ஜோடியாகநடிக்கிறார்.
 8. குஷ்புவின் மகள் தி.மு. வில் இணைந்தார்தன் அன்னையைப் போலவே தானும் இறுதி வரைகட்சித்தலைமைக்கு உண்மையாக இருப்பேன் என உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.
 9. மானாட மயிலாட நிகழ்ச்சி கின்னஸ் ரெக்கார்ட்உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு நிகழ்ச்சிதொடர்ந்து ஐம்பது சீஸன்களை கடந்து இன்னும் ஒளிபரப்படுவது இந்த நிகழ்ச்சி மட்டுமே என்று கலாமாஸ்டர் பெருமிதம்இந்த நிகழ்ச்சியை விடாமல் (வேறு வழியில்லாமல்முப்பது வருடங்களாக பார்த்துவரும் தமிழக மக்களுக்கு சகிப்புத்தன்மைக்கான போபல் பரிசு விரைவில் வழங்கப்படும் என நோபல் கமிட்டிஅறிவிப்பு.
 10. 2031-ல் நான் தான் தமிழக முதல்வர் விஜயகாந்து கொக்கரிப்புதி.மு. வின் ஊழல் அரசாங்கத்தை ஒழித்து,ஓரங்கட்டிஆட்சிக்கட்டிலில் தமிழக மக்கள் என்னை உட்கார வைப்பார்கள் என விஜயகாந்த் அறிக்கைஇந்நிலையில் இவர் இன்னமும் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் ”விருதகிரி” படம் இவ்வருட இறுதிக்குள்வெளிவரும் என பீதியைக் கிளப்பியுள்ளார்.
 11. அஸாம் மாநிலத்தை வாங்கினார் கலாநிதிமாறன்மேலும் இரண்டு மாநிலங்களை பேரம் பேசி வருவதாகசெய்தி.
 12. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டாவது தருபவர்களுடனே கூட்டணிலட்சிய தி.மு. தலைவர்விஜய.T.ராஜேந்தர் பேட்டி.
 13. எத்தனை முறைதான் சென்னைக்கும்மதுரைக்கும் அலைவதுவரும் சட்டமன்ற தேர்தலில் எனதுதலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்படும்பா.. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
 14. 7G முறைகேடு தொடர்பான 20 லட்சம் கோடி ஊழலை சி.பி. விசாரிக்கக் கோரி கம்யுனிஸ்ட் கட்சிகள்போராட்டம்.  7G ஏலம் வெளிப்படையாகவே நடந்ததுஎந்த விதமான முறைகேடோஊழலோ நடக்கவில்லைஇதுதொடர்பாக அனைத்து விவரங்களும் பிரதமர்ராகுல் காந்திக்கும் தெரியும்மத்திய அமைச்சர் ராசாஅறிக்கை.
 15. ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100 வதுசதமடித்து உலக சாதனை.  உலகசாதனை நினைவுப் பரிசை சச்சினுக்கு முன்னாள் இந்திய கேப்டனும்இந்நாள் BCCI தலைவருமானதோனி வழங்கினார்.
 16. 2031 ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடத்த ஒப்ப்ந்தம்ஒலிம்பிக் போட்டிகளுக்காக மத்திய அரசு 7 லட்சம்கோடி ஒதுக்கீடுஇந்திய ஒலிம்பிக் தலைவர் கல்மாடி குஷி பேட்டிகாமன் வெல்த் போட்டிகள் போலஇதையும் வெற்றிகரமாக நடத்துவோம் என அறிவிப்பு.
 சொல்ல முடியாதுமேல சொன்ன எல்லாமே உண்மையில் நடக்கலாம்நடக்கும்.

1 comment: